Monday 5 December 2022

9.பரதன் சித்திரக்கூடம் செல்லுதல்

 



பரதன் தன் தாய் கைகேகியின் மீது அதிக சினம் அடைந்தான்.;பதவி மோகம் உனது அறிவைப்பாதித்து விட்டது.மூத்தவன் இருக்க இளையவன் நான் அரசாள்வதா..ராமன் உன்னை தன் தாயினும் அதிகமாக நேசித்தானே..அவனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது..உன்னை கொலை செய்வதே நன்று.ஆனால் … ராமன் அதை ஆமோதிக்க மாட்டான்.அவனை எண்ணி உன்னை கொல்லாமல் விடுகிறேன்’ என்றான்.

மேலும் ‘நான் இந்த ராஜ்ஜியத்தை ஆளுவேன் என நினைக்காதே.ராமனைத்தேடி இப்பபோதே கிளம்புகிறேன்.ராமன் இல்லாமல் அயோத்தியில் நுழையமாட்டேன்.இனி நானும் தவ வேடத்தில் தான் இருப்பேன்’என பரதன் பதில் கூறினான்.

பின் வசிஷ்டரை சந்தித்து தந்தைக்கு செய்யவேண்டிய இறுதி சடங்குகளுக்கான ஏற்பாட்டினை  செய்யச்சொன்னான்.

பின் மந்திரிகளையும் முதியோர்களையும் சந்தித்து ஆலோசனை செய்தான்.பர்தன் தான் பதவி ஏற்கவரும் முறையையும்..ராமனை மீண்டும் அழைத்து வந்து பட்டாபிஷேகம்  செய்விப்பதாகவும் கூறி படைகளுடன் ராமனை அழைத்து வரச்சென்றான்.

கங்கைகரையில் குகன் முதலில் பரதனையும் அவனது படையையும் கவனித்தான்.ராமனுக்கு துன்பம் இழைக்க வருவதாக எண்ணினான்.ஆனால்…அவன் மரவுரி தரித்து தவக்கோலத்தில் வந்ததால் அவனை வரவவேற்று உபசரித்து அவன் வந்த நோக்கம் அறிந்து உதவி செய்தான்..

தன் படைகளை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு, வசிஷ்டரும்,பரதனும் பரத்வாஜ் ஆசிரம்த்திற்கு சென்று பரத்வாஜரை சந்தித்தனர்.அவர்,அவர்களை வரவேற்று ராமன் இருக்குமிடம் தெரிவித்தார்.

பரதன்,வசிஷ்டர் மற்றும் படைகள் புடைசூழ சித்திரக்கூடம் சென்றான்.

லட்சுமணன்,ஒரு படை வருவதைக்கண்டான்.அது இளவல் பரதனின் படை என்பதை உணர்ந்தான்.

அவர்களுக்கு உபத்திரம் செய்ய வந்திருப்பான் என்று எண்ணி….அவனை ஒரு நொடியில் ஒழித்து விடுகிறேன் என கூறிக்கொண்டு ராமனிடம் சென்று பரதன் படையெடுத்து வருவதைக் கூறினான்.


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...