Wednesday 14 December 2022

15. ஜடாயு,கபந்தன் தகனம்

 



சீதையைத் தேடி ராமனும்,லட்சுமணனுன் சென்றனர்.அவ்வாறு செல்லும் வழியில் ஜடாயு இரத்த வெள்ளத்தில் கிடந்தது.

ஜடாயு சீதையை ராவணன் தென்திசை நோக்கி எடுத்து சென்றதையும் அவனுடன் போர் செய்து தான் இவ்வாறு கிடப்பதையும் கூறி உயிர் விட்டது.

ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ராமன் செய்தார்.ஜடாயு மூலம் சீதையை பற்றிய தகவல்கிடைத்தது பற்றி தைரியம் அடைந்தனர்.

ஒருத்தருக்கொருத்தர்  ஆறுதல் கூறிக்கொண்டு செல்கையில் ஒரு கோர உருவம் அவர்களைப் பற்றிக்கொண்டது.அவன் பெயர் கபந்தன்.அவனுக்கு தலையும் இல்லை,கால்களும் இல்லை.கைகளை எவ்வளவு தூரம் நீட்டமுடியுமோ…அவ்வளவு தூரம் நீட்டி கிடைத்த உணவை உண்பவன்.

ராமனும்,லட்சுமணனும் அரக்கர்களின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டவுடன் அரக்கன் நீங்கள் இருவரும் தசரத குமாரர்கள் என அறிவேன்.உங்களால்தான் எனக்கு சாபவிமோசனம் கிடைக்க உள்ளது.எனவே என் உடலை  எரியுங்கள் என்றான். அவ்வாறு அவனது உடலை எரிக்க அவன் அழகிய உடலை பெற்றான்.சுவர்க்கம் சென்றான். 

பம்பா நதிக்கரையில் சுக்ரீவன் என்ற வானரத்தலைவன் இருக்கிறான்.அவனது நட்பை பெறுங்கள்.உங்கள் காரியம் கைகூடும் என்று கூறி சுவர்க்கம் சென்றான்.

ஆரண்ய காண்டம் முற்றும்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...