Saturday 3 December 2022

8. தசரதர் மறைவு

 

சித்திரகூடத்தை நோக்கி மூவரும் செல்கையில் அடர்ந்த மரங்கள்,புதர்கள் நிறைந்த வழியாக செல்ல வேண்டியிருந்தது.
லட்சுமணன் நடந்து செல்ல பாதையை உருவாக்க …சீதை வழி நெடுக மரம்,செடி காடுகள்,விலங்குகள் பற்றியும்,பறவைகள் பற்றியும் ஆர்வத்துடன் வினாக்கள் எழுப்பிய வண்ணம் சென்றாள். கடைசியில்  அவர்கள் மந்தாகினி நதியை அடைந்தனர்.

பரத்வாஜர் கூறிய சித்ரகூடம் இது தான் என அறிந்து  லட்சுமணன் அங்கு அவர்கள் தங்க பர்ணசாலையை அமைத்தான்.
சித்ர கூடம் எழில் மிகுந்து அமைந்திருந்தது.
அயோத்தியில்,ராமன் திரும்பி வரக்கூடும் என எண்ணியிருந்த தசரதன், தேரோட்டி சுமந்திரன் ராமன் காட்டிற்கு சென்றுவிட்டதைக் கூற..மனம் வருந்தி தசரதர் உயிர் துறந்தார்.
தசரதர் மறைந்ததும், வசிஷ்டர்  அடுத்து செய்யவேண்டிய செயல்களில் ஈடுபட்டார்.தசரதர் உடலை பரதன் வரும்வரை பாதுகாக்க ஏற்பாடு செய்தார்..

பரதனை உடனே அழைத்து   வர பணியாட்களை  அனுப்பிவைத்தார்.அவர்களும் சென்று பரதனை விவரம் எதுவும் கூறாமல் அழைத்து வந்தனர்.ஆனால்,வழி நெடுக பரதன் துயரம் ஆழ்ந்த சகுனங்கள் தென்படுவதைக் கண்டான்.

பரதன் நேராக தந்தையைக் காணச் சென்றான்.
அங்கு கைகேயி ..தசரதர் காலமான விஷயத்தை சொன்னாள்.பரதன் அழுது புரண்டான். பின் தன் தாயிடம் தசரதன் இறக்கும் போது என்ன கூறினார் என்று கேட்க …அவளும் ‘ராமா’ என்று மட்டுமே கூறியதாகச் சொன்னாள்.

பின் ராமன் வனவாசம் சென்றுள்ளதாகவும்,பரதன் பட்டமேற்கவும் அவரிடம் தான் வரம் கேட்டதையும் கூறினாள்.
அதைக் கேட்டு பரதன் மிகவும் கோபமடைந்தான். 

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...