Friday 9 December 2022

12.சூர்ப்பனகை


 


ராமன்  அகஸ்தியரின் ஆசிரமத்துக்கு சென்றான்.முனிவரின் காலில் விழுந்து அனைவரும் ஆசிபெற்றனர்.

அகத்தியர் ஆசிரமவாசிகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினார்.அகஸ்தியர் மூலமாக பெரிய அரிய சாஸ்திர வித்தைகளை ராமர் அறிந்தார்.

தெய்வீக ஆயுதங்களை ராமனுக்கு உரியவன ஆக்கினார். ராமன் பஞ்சவடியில் சென்று ஆசிரமம் நடத்த ஆணை இட்டார்.

பஞ்சவடி என்பது கோதாவரி நதிக்கரையில் இருந்தது.அகஸ்தியரிடம் இருந்து அவர்கள் விடைபெற்றனர்.

பஞ்சவடி  நோக்கிச் செல்லும் போது ஒரு பெரிய கழுகை கண்டனர்.அது கருட பகவான் தம்பியான அருணனுடைய மகன் ஜடாயு என அறிந்தனர்.

ராமர்,சீதை லட்சுமணர்களை தசரதர் மக்கள் என்று அறிந்ததும் ஜடாயு இறங்கி வந்து அவர்களைத் தழுவிக்கொண்டது.

பஞ்சவடியில் லட்சுமணன் பர்ணசாலை அமைத்தான்.அங்கு சில நாட்கள் அமைதியாக கழிந்தது.

ஒரு நாள் அங்கு சூர்ர்ப்பனகை எனும் அரக்கி வந்தாள். அவள் நினைத்த வடிவம் கொள்ள வல்லவள்.இவள் இராவணன் கும்பகர்ணன்,விபீஷணன் தங்கை ஆவாள்.

ராமனின் அழகில்  மயங்கி, ராமனை தன்னை திருமணம் செய்து கொள்ளச்  சொன்னாள்.

ராமனும்,தான் தன் மனைவியுடன் இருப்பதாகவும்,தன் தம்பி லட்சுமணன் திருமணம் ஆனவன் ஆனாலும் அவன் மனைவி இங்கு இல்லை.அவனை சென்று பார்க்கும்படியும் கூறினான்.

லட்சுமணன் சூர்ப்பனைக்கு சரியான  பாடம் கற்பிப்பான் என ராமன் அறிவான்.

சூர்ப்பனகை லட்சுமணனிடம் சென்றாள்.தன்னுடன் இன்பமாக இருக்கக்கேட்டாள்.

லட்சுமணன் கோபத்தால் அவளது மூக்கையும் காதையும் அறுத்துவிட்டான்.

சூர்ப்பனகை அழுதபடியே தன் சகோதரர்களிடம் சென்று நடந்ததை கூறினாள்.

தன் தங்கைக்காக கரன்,தூஷணன்,திரிகரன் மூவரையும் ராமரை எதிர்க்க அனுப்பினார்கள்.

ராமர் லட்சுமணனை சீதையின் பாதுகப்பில் விட்டுவிட்டு அவர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தான்.


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...