லட்சுமணன் ராமனிடம் பரதன் படையெடுத்து வருவதாகக் கூறியதும்…
ராமன்’ லட்சுமணா..அவசரப்படாதே…பரதன் இங்கேயே தங்கி எனக்கு. தொண்டு புரிய நினைத்தால்
அவனுக்கு பதிலாக நீ அயோத்தி சென்று அரசாள்வாயாக’ என்றார்.
பரதனும் சத்ருக்கனும் அங்கே வந்து ராமர் கால்களில் விழுந்து வணங்கினர்.தந்தை காலமானதையும் கூறினார்கள்.அனைவரும் தந்தைக்கு நேர்ந்த முடிவை எண்ணி வருந்தினர்.பின் சகோதரர்கள் நால்வரும் சீதையும் சேர்ந்து தசரதனுக்கு செய்யவேண்டிய சடங்குகளை முறையாகச் செய்தனர்.
பரதன் ராமனை அயோத்திக்கு வந்து ஆட்சி செய்ய அழைத்தார்.
தந்தைக்கு அளித்த வாக்கை நான் மீறமாட்டேன்.14 ஆண்டுகள் முடிந்ததும் அங்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்கிறேன் என கண்டிப்புடன் கூறினார் ராமன்.
வசிஷ்டர் பரதனை ராமனின் பிரதிநிதியாக ஆளும்படி கேட்டுக்கொண்டார்.
பரதன் சிம்மாசனத்தில் ராமனின் பாதுகைகளை வைத்து ராமனின் பிரதிநிதியாக அரசாள்வதாகக் கூறினான்.
அயோத்திக்கு அருகில் உள்ள நந்தி கிராமத்தில் தங்கி..தவம் புரியும் பாங்கில் தன்னால் இயன்ற அளவு அரசாட்சி செய்வதாக கூறினான்.
ராமன் பரதனைக் கட்டித் தழுவி தன் இரு பாதங்களையும், பாதுகையின் மேல் பதியவைத்து தம்பி பரதனிடம் அளித்தான்.
பரதன் ராமனின் பாதுகைகளை தன் தலையில் சுமந்து கொண்டு நந்தி கிராமத்திற்கு வந்தான்.பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்வித்து ராமனின் பிரதிநிதியாக ராஜ்ய பரிபாலனத்தை மேற்கொண்டான்.
(அயோத்தியா காண்டம் முற்றிற்று )
No comments:
Post a Comment