Wednesday 7 December 2022

ஆரண்ய காண்டம்


 


11.தண்ட காரண்யம்

——————————-

ராமனுக்கு பரத,சத்துருக்கனும்,வசிஷ்டரும் வந்தது வேதனையாக இருந்தது.மேலும் சித்ரகூடத்தில் இருப்பது தன் தவ வாழ்க்கைக்கு ஏற்றதல்ல….இனி அயோத்தியிலிருந்து யாராவது வந்து கொண்டிருப்பார்கள் என ராமன் தண்டகாரண்யம் செல்ல முடிவெடுத்தான்.தண்டகாரண்யத்தில் ரிஷிகள் பலர் இருப்பதால் தவ வாழ்க்கைக்கு அதுவே சிறந்த இடம் எனக் கருதினார்.

தண்டகாரண்யத்தில் முதன் முதலாக் அத்ரி முனிவர் ஆசிரமம் சென்றனர்.அத்ரி முனிவரின் பத்னி அனுசுயா ஆவாள்.அத்ரி முனிவரும் அனுசுயா தேவியும் தனது குழந்தைகளைப்போல ராம,லட்சுமணன்,சீதை ஆகியோரை கவனித்துக்கொண்டனர்.ராமனின் தவத்துக்கு இடயூறு விளைவிக்கும் விலங்குகளை கொன்றனர்.

ராம,லட்சுமணன் சீதையுடன் கானகம் செல்லும்போது விராதன் என்ற ராட்சசன் வந்தான்.

அவன் ராமனையும்,சீதையையும் கொன்றுவிட்டு…சீதையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்வேன் என்று கூறி அவர்களுடன் சண்டையிட்டான்.யுத்தம் உக்ரமாக நடந்தது.ராட்சசன் இறக்கவில்லை.உடனே அவர்கள் ஆழமான குழி ஒன்றினை வெட்டி அவனை அதில் புதைத்தனர்.அக்கணமே சாபத்திலிருந்து விடுபட்டு அரக்கன் கந்தர்வன் ஆனான்.கந்தர்வன் அவர்களை சரபங்க முனிவரின் ஆசிரமம் செல்லுமாறு கேட்டுக்கொண்டான்.

அவன் கேட்டுக்கொண்டபடி அவர்கள் சரபங்க ஆசிரமம் சென்றனர்.சரபங்கனின் ஆயுள் முடியும் நேரம் வந்தது.சரபங்கன் ராமன்,லட்சுமணன்,சீதை மூவரையும் கண்டதும் அவர்களிடம்..’ராமா..மண்ணுலகில் நீ ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன.நீ சுதீஷண மகரிஷியின் ஆசிரமம் செல்’ என்று சொல்லி தன் உடலை வேள்வி தீக்கு இரையாக்கினார்.

பின் அவர்கள் சுதீஷண முனிவரின் ஆசிரமம் சென்றனர்.ராமர் அங்குள்ள சில ஆசிரமங்களுக்கு சென்றார்.எங்கெங்கு எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்  என முறைவைத்துக்கொண்டு சென்றார்.அங்கு ரிஷிபங்க முனிவரை தரிசித்தார்.

ரிஷிகளுடன்,ராமன் தண்டகாரண்யத்தில் பத்து ஆண்டுகள் கழித்தார்.பத்து ஆண்டுகளும்,சிறப்பாகவும்,விரைவாகவும் சென்றதை உணர்ந்தார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...