Thursday 1 December 2022

7.குகனுடன் ஐவரானோம்..

 

மறுநாள் காலையில் கங்கை நதிக்கரை ஓரம் ராமன்.லட்சுமணன்,சீதை ஆகிய மூவரும் வந்து சேர்ந்தனர்.

சாரதி அவர்களை பிரிய மனமில்லாமல்  அழுதான்.அவனுக்கு ஆறுதல் கூறிய ராமன் ..தாங்கள் மூவரும் காடு நோக்கி செல்வதாக அரண்மனையில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும்படி கூறினான். சாரதி சுமந்திரன்காலி  ரதத்தை அயோத்திக்கு ஓட்டி சென்றான்.

கங்கைக்கரையில்  படகுத் தலைவன்  குகன் அவர்களை வரவேற்றான்.அவர்கள் வனவாசத்தின் 14 ஆண்டுகளையும் தன்னுடன் கழிக்குமாறு வேண்டினான்.
ஆனால் அவ்வாறு செய்வது தான் எடுத்துள்ள விரதத்துக்கு சரியில்லை என ராமன் கூறினான்.
பின் படகுத் தலைவன் ராமனுக்கு அறுசுவை உணவு  வழங்கினான்.
அதையும் ராமன் ஏற்கவில்லை.வெறும் கனிகளையே உண்டான். குகனது நட்பை பாராட்டி அந்த இரவை அங்கு கழித்தனர்.
ராமன் குகனை தன் சகோதரனாக பாவித்து’குகனுடன்  ஐவரானோம்’ என்றான்.

காலையில் சீதா தேவி கங்கா தேவிக்கு பூஜை செய்தாள்.ராமர் வழிபாடுகளை முடித்துக்கொண்டு கங்கையின் தெற்கு கரைக்கு வந்தார்..தெற்கு கரைக்கு வந்தார். அங்கு மானிடர்கள் யாரும் இல்லை.அப்போதுதான் ஏகாந்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை மூவரும் உணர்ந்தனர்,


ஆங்காங்கு அம்ர்ந்துள்ள பெரியோர்களின் நட்பைப்பெற திட்டமிட்ட ராமன் பரத்வாஜ மகரிஷியை சந்திக்க அவரது ஆசிரமத்துக்கு சென்றார்.
பரத்வாஜர் ராமன்,லட்சுமணன்,சீதை மூவரும் மகாவிஷ்ணுவின அவதாரம் என்பதை உணர்ந்திருந்தார்.

மூவரும் தங்கள் ஆரண்யவாசத்தை எப்படி நடத்த வேண்டும் என பரதவாஜ்  மூலம் தெரிந்து கொண்டனர்.
பின்,அவர்கள் பரத்வாஜ் ஆசிரமத்திலிருந்து சித்ரகூடம் செல்ல முற்பட்டனர்

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...