தசரத சக்கரவர்த்திக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தார்.அதனால் அன்பு மகன் ராமனுக்கு முடி சூட நினைத்தார்.கேகய நாட்டிலிருந்து பரதனை வரவழைக்ககூட அவகாசமில்லாது …ராமனுக்கு முடிசூட நாள் குறிக்கப்பட்டது.
நாடே… ராம பட்டாபிஷேகத்தைக் கொண்டாட தயாரானது.அதேசமயம், சூழ்ச்சி ஒன்றும் உருவானது.அரண்மனையில் மந்திரை என்ற கூனி இருந்தாள்.கைகேய சக்கரவர்த்தினிக்கு அவள் பணிப்பெண் ஆவாள்.கைகேயின் திருமணத்திற்கு பின் கைகேயிக்கு பணியாற்ற வந்தாள்.கூனி கைகேயியைப் பார்த்து “ நாளை ராமன் பட்டாபிஷேகம்.உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
கைகேயி “அப்படியா,நல்ல செய்தி” என முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள்.உடனே கூனி அந்த முத்துமாலையை வீசி எறிந்தாள்.
கைகேயி…”உனக்கு என்ன பைத்தியமா? உன் மகன் பரதன் அரசாளாது ராமன் அரசாண்டால் உன் வம்சம் எப்போது முன்னுக்கு வரும்.கோசலையை எல்லோரும் பாராட்டுவார்கள்.உன் நிலை என்ன? பரதன் இல்லாதபோது நடக்கும் இந்த பட்டாபிஷேகம் ஒரு சூழ்ச்சி போலத் தெரிகிறது.” என அவள் மனதில் நஞ்சினைக் கலந்தாள்.
இப்போது கைகேயி பரதன் நாடாள ஆசைப்பட்டாள்.
முன்னர் ஒரு சமயம் சம்ராசுரன் யுத்தத்தில் தசரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் அளித்தார்.அவற்றை எப்போது வேண்டுமோ அப்போது பெற்றுக்கொள்வதாகக் கூறி இருந்தாள்.
இப்போது அந்த வரத்தை கேட்டுப் பெற முற்பட்டாள்.
ஒரு வரத்தின் படி பரதன் நாடாளவும்,மற்ற வரத்தின்படி ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ளவும்,தசரதனிடம் கேட்டாள்.
தசரதன் தன் மேல் இடி விழுந்ததைப்போல உணர்ந்தான்.
கைகேயியைப் பார்த்து கெஞ்சினான்.”பரதன் வேண்டுமானால் அரசாளட்டும்,ராமனை காட்டிற்கு அனுப்பவேண்டாம் என்று கேட்டார்.
கைகேயி..ஒரே பிடிவாதமாய் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று கேட்க தசரதன் அப்போதே ராமனைக் காணவேண்டும்.உடனே அழைத்து வா” என்று கூறி மூர்ச்சித்து விழுந்தார்.
No comments:
Post a Comment