Monday 19 December 2022

20.- அனுமன் விஸ்வரூபம்




 ராமன் அனுமனிடம் தன் மோதிரத்தை கொடுத்து இதனை அடையாளப் பொருளாக வைத்துக்கொள்.இதனை சீதையிடம் கொடுத்தால்…உன்னை எனது தூதன் என  நம்புவாள். என்று சொல்லிவிட்டு சீதையை பற்றி சில அடையாளங்களும் கூறி தென் திசை நோக்கி செல்லுமாறும்,இலங்கை அந்த திசையில் தான் இருக்கிறது என்றும் கூறினார்.சுக்ரீவன் தென் திசையில் செல்லும் வழிகளையும் அத்திசையில் காணக்கூடிய மலைகளையும்,அருவிகளையும்,ஆறுகளையும் விளக்கினான்.

அனுமன்,அங்கதன் படைகள்தெற்கு நோக்கி சீதயைத்தேடி போனார்கள்.

வடக்கு,மேற்கு,கிழக்கு திசைகளில் சென்ற படைவீரர்கள் சீதை கிடைக்காமல் ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தனர்.

அனுமனும்,அங்கதனும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டே தெற்கு நோக்கி சென்று கொண்டே கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.அங்கு சம்பாதி என்ற கழுகு அரசன் இருந்தான்.மிகவும் வயதானவன்.ஆனால் கண்பார்வை கூரியதாக இருந்தது.

இவர்கள் சீதையை பற்றியும்,தனது தம்பி ஜடாயு பற்றியும் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவர்களைப் பற்றி அறிந்து கொண்டது சம்பாதி தன் தம்பி ஜடாயு இறந்ததை கேள்விபட்டு மிகவும் வருந்தியது மேலும் தன் கூரிய பார்வையால்.

சீதை இலங்கையில் இருப்பதையும் சீதை சிறைவைக்கப்பட்டு இருப்பதையும் கூறியது.இலங்கை செல்லுமாறு கேட்டுக்கொண்டது.ஆனால் கடலைத் தாண்டி சென்றால்தானே இலங்கையை அடையமுடியும்.

‘நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்’ என வானரங்களைக் கேட்டான் அங்கதன்.

ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு சொன்னார்கள்.ஆனால் அனுமன் ஒன்றும் கூறவில்லை.ஆனால் அனைவரும் அனுமனால்தான் இக்காரியம் நடைபெறமுடியும் என்றும்,திரிவிக்ரமனைப்போல விஸ்வரூபம் எடுக்க முடியும் என்றனர்.ஒரே தாவலில் இலங்கை செல்லலாம் என வானரப்படையின் தலைவர் ஜாம்பவான் கூறினார்.

உடனே…மகிழ்ச்சியுடன் அனுமன். மிக உயர்ந்த வடிவம் எடுத்தான்.எல்லோரும் அவனது அடிமுடி காணாமல் திகைத்தனர்.

அனுமன்,’நீங்கள் கவலையின்றி இங்கேயே இருங்கள்…விரைவில் திரும்பி வருவேன்…என்று கூறி ஒரே தாவலில் இலங்கை சென்றான்.

(கிஷ்கிந்தா காண்டம் முற்றும்)

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...