Thursday 22 December 2022

23. இந்திரஜித்

 



ராமன்,லட்சுமணன் பெயரைக்கேட்டு சீதை மகிழ்ந்தாள்.துன்பம் நீங்கிட வழி கிடைத்ததே என்ற ஆவலில் ராமனை பிரிந்து இவ்வாறு வாடுகிறேன் என்று கூறினாள்.

தாயே,உங்களைப் பிரிந்து ராமன் மிகவும் துன்பத்தில் உள்ளார். விரைவில் அவர் தங்களை மீட்க வருவார்’ என்ற அனுமன் தன்னைப்போல வானர சேனைகள் பல ஆயிரம் உள்ளதாகவும்,இராமன் சேனைகளுடன் வந்து ராவணனை வதம் செய்து அவளை மீட்டுச் செல்வார்.அதுவரை பொறுமையாய் இருக்கும்படி கூறி ராமர் கொடுத்த கணையாழியை சீதையிடம் அனுமன்கொடுத்தார்.

கணையாழியைக் கண்டதும் ராமனையே கண்டது போல சீதை மகிழ்ந்தாள்.

‘இன்னும் நான் நாள் காத்திருக்கமுடியாது.உடனே என் உயிரை காப்பாற்றும்படி கூறு.இந்த சூடாமணியை ராமனுக்கு அடையாளமாகக் கொடு என்று தன் உடை தலைப்பில் முடிந்து வைத்திருந்த அந்த ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்தாள்.அனுமன் சீதைக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

சீதையின் நிலையைக் கண்ட அனுமனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று..தன்னால் இயன்றவரை அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினான். மரங்களை ஒடித்து  அசோகவனத்தை அழித்தான்.

இதனை அறிந்த ராவணன் அனுமனை பிடிக்க உத்தரவிட்டான்.வீரர்களுக்கும் அனுமனுக்கும் கடும்போர் நிகழ்ந்தது.போரில் பலர் மாண்டனர்.ராவணனின் பராக்கிரமசாலியான  ஜம்பு மாலினி என்ற அரக்கனை போருக்கு அனுப்பினான்.

ஜம்புமாலினி அனுமனிடம் அதிகம் போர் புரியவில்லை.உடனே வீழ்ந்து உயிர் விட்டான்.ஜம்புமாலினி இறந்ததைக் கேட்டு அவரது மகன் அட்சயன் வந்தான்,அவனது தேர்  சக்தி வாய்ந்தது.வானத்தில் யுத்தம் நடந்தது.அனுமன் அட்சயனுடைய குதிரையையும்..அவனையும் கொன்றான்.இதைக்கேட்டு ராவணன் அதிச்சி அடைந்தான்

தன் மகன் இந்திரஜித்திடம்,அட்சயன் கொல்லப்பட்டதையும், வந்திருக்கும் குரங்கு சாமான்ய குரங்கு அல்ல,வலிமையுள்ளது என்றும் அதனை இந்திரனையே வென்ற உன்னால் தான்வெல்லமுடியும் என்றும் கூறி..அதை கட்டி இழுத்துவா என்றான்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...