இந்திரஜித் எதிரிகளின் படை மீது நாகாஸ்திரத்தை ஏவினான்.ராம,லட்சுமணர் மயக்கம் அடைந்தனர்.
இந்திரஜித் தன் தந்தை ராவணனிடம், ராம லட்சுமணர்களை கொன்றுவிட்டதாக மிக்க மகிழ்ச்சியுடன் வாத்தியங்கள் முழங்க சென்று வெற்றி செய்தியை தெரிவித்தான்.
சீதையை, ராட்சர்கள் புஷ்பக விமானத்தில் ஏற்றி வந்து ராம,லட்சுமணர் மூர்ச்சித்து வீழ்ந்துள்ளதையும்,வானரங்கள் இறந்துள்ளதையும் காண்பித்தனர்.மேலும் ராமன்,லட்சுமணர் இருவரும் இறந்து விட்டதாக பொய் உரைத்தனர்.
சீதை தாங்கொண்ணா துயரம் அடைந்தாள்.துயரம் பலவாறு அவளை வாட்டியது.திரிசடை என்ற அரக்கி சீதையை தேற்றினாள்.இது ஒரு மாயத்தோற்றமே,விரைவில் ராமன் எழுந்து போரிட்டு உன்னை மீட்டு செல்வான் என ஆறுதல் கூறினாள்.
ராமனும் லட்சுமணனும் செயலற்று கரையில் கிடப்பதைப் பார்த்த சுக்ரீவன் பெரும் குழப்பத்துக்கு ஆளானான்.வானர் கூட்டத்தில் சேனன் என்ற தலை சிறந்த வைத்தியர் ஒருவர் இருந்தார்.
உடனடியாக ராமரையும்,லட்சுமணனையும் கிஷ்கிந்தைக்கு கொண்டு சென்றால் குணப்படுத்தமுடியும் என்றார்.இந்த நிலையில் ராமரையும்,லட்சுமணனையும் அவ்வளவு தூரம் கொண்டு செல்வது இயலாது என வேறு வழி பற்றி ஆலோசித்தார்.
கைலாயத்தின்மத்தியில் சுந்தரா என்ற மலை உள்ளது.அம்மலையில் உயிர்காக்கும் மூலிகையான சஞ்சீவிகரணி,வியல்யகரணி,சாவர்ணயகரணி,சந்தான கரணி போன்ற மூலிகைகள் உள்ளன.மாண்டு போனவர்களையும் உயிர் தர வல்லது.அவற்றை இந்த இரவில் அடையாளம் கண்டு எடுத்து வருவது கடினம்.எனவே அந்த மலையை அனுமன் அப்படியே தூக்கி வரவேண்டும் என்று கூற ,வடதிசை நோக்கி அனுமன் வால்நட்சத்திரம் போல் பாய்ந்தான்.
கைலாசத்துக்கு அருகில் இருந்த சிகரத்தின் மீது இறங்கினான்.மூலிகைகளைத்தேடநேரமில்லை.மலையை அப்படியே தூக்கிகொண்டு சூரிய உதயத்திற்குள் வந்துசேர்ந்தார்.மலையில் உள்ள மூலிகையின் வாசத்தால் அனைவரும் உயிர் பெற்றனர்.
அனுமன் மீண்டும் சஞ்சீவ பர்வதத்தை அதே இடத்தில் வைத்தான்.
No comments:
Post a Comment