Thursday 29 December 2022

29. அங்கதன் தூது.

 


தூதுவன் ஒருவனை அனுப்பி சீதையை விடுவிக்க சொல்லலாம்.ராவணன் மறுத்தால் போர் செய்யச் சொல்லலாம்’ என்று ராமன் கூறினான்.பின் தூதுவன் ஒருவனை அனுப்ப முடிவு  செய்யப்பட்டது

இம்முறை அங்கதனை தூது அனுப்ப முடிவு செய்தனர்.ஏனெனில் பகைவர்கள் தீது செய்தாலும் தீதின்றி மீண்டு வரக்கூடியவன் அங்கதன் மட்டுமே என்பதால்.

அங்கதனுக்கு அவன் கூறவேண்டிய செய்திகளை ராமன் எடுத்துரைத்தான்.

அங்கதன் இலங்கையை அடைந்து ராவணன் அரண்மணைக்கு சென்றான்.அங்கதனைப் பார்த்த ராவணன்’ நீ யார்?’  வந்த  காரியம் என்ன? என்றார்.மேலும் இங்குள்ள அரக்கர்கள் உன்னைக் கொன்று தின்பதற்குள் விவரங்ளைக்  கூறு’ என்றான்.

அங்கதன்,தான் ராமனின் தூதன் என்றும்,தன் பெயர் அங்கதன் என்றும் தான் வாலியின் மகன் என்றும் தன்னைப்பற்றிக் கூறினான்.

 பதிலுக்கு  ராவணன்’வாலி எனது  நண்பன்.நீ ராமரிடம் இல்லாமல் என்னுடன் வந்துவிடு.உன்னை நான் வானரங்களின் தலைவனாக்குகிறேன் என்றான்  அங்கதனிடம்.

ஆனால் அங்கதனோ..’சீதையை நீ விடுவித்தால் உன் தலை தப்பும்.இல்லையேல் நீயும் உன் குலமும் அழிவது உறுதி’ என்றான்.மேலும் உன் தம்பி விபீஷணன் ராமர் பக்கம் உள்ளான்.உனது தவற்றை உணர்ந்து சரண் அடைவதே மேல்,இல்லையேல் போர் நடப்பது உறுதி என்றான்.

அங்கதன் சொன்னதைக் கேட்ட ராவணன் கோபம் அடைந்தான்.’இவனை பிடியுங்கள்’ என்று ஆணையிட்டான்.தன்னை பிடிக்க வந்தவர்களை தூக்கிக் கொண்டு உயரே பறந்தான்  அங்கதன்.பின் அவர்களை கோபுர வாசல் அருகே போட்டு விட்டு தன்காலால் மிதித்து கொன்றான்.

உடன் அங்கிருந்து புறப்பட்டு ராமரிடம் சென்றான்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...