ராவணன்,இந்திரஜித் ஆகியோர் மிகவும் குழப்பத்தில் இருந்தனர்.இறந்தவர்கள் எப்படி உயிர்பித்தார்கள் என்பது அவர்கள் குழப்பமாகும்.
ராவணன் மீண்டும் இந்திரஜித்தை போருக்கு செல்லுமாறு கூறினான்.இப்போது இந்திரஜித் மாய சீதை ஒன்றைக்கொண்டு வ்நது ராம் லட்சுமணன் முன் வெட்டி சாய்த்தான் இதனை க்கண்ட லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான்.விபீஷணன்,இந்த செயல் இந்திரஜித்தின் மாயச் செயல் என்று கூறி லட்சுமணனை தேற்றினார்.
இந்திரஜித் மாயம் போர் செய்தான்.இந்திரஜித் அரிய வரங்கள் பெற்றவன்.அவனைக் கொல்வது என்பது கடினம்.14 ஆண்டுகள் அன்ன ஆகாரம்.உறக்கம் இல்லா ஒருவனால் தான் மரணம் வந்தடையும் என்ற வரம் பெற்றவன்.
லட்சுமணன் ஒருவனே வனவாசம் மேற்கொண்ட நாள் முதல் அன்ன ஆகாரமும்,உறக்கமும் இல்லாமல் ராமனை காத்து வந்தான்.எனவே இந்திரஜித் மரணம் லட்சுமணன் கையால் என்பதை உணர்ந்த ராமர்,இந்திரஜித்தை வெல்ல தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும்,இந்திரஜித்துடன் போர் புரிய லட்சுமணனை பணித்தார்.
லட்சுமணனின் ஒரே பாணத்தால் இந்திரஜித் மாண்டான்.இந்திரஜித் மாண்ட செய்தி கேட்டு ராவணன் மிகவும் வருந்தினான்.
அடுத்து எதிரியை எதிர்க்க தானே கடும் கோபத்துடன் படை திரட்டி வந்தான்.இதுவரையில் காணாத பெரும்படையுடன் ராமனை எதிர்த்தான்.
ராமரும்,லட்சுமணனும் ராவணனை பல அஸ்திரங்களால் எதிர்த்தனர்.கர்தர்வ அஸ்திரத்தை ராமர் பிரயோகித்தார்.இந்த அஸ்திரம் ராமனுக்கும் சிவபெருமானுக்கும் மட்டுமே தெரியும்.இந்த அஸ்திரத்தை ஏவியதின் விளைவாக எங்கு காணிலும் ராமரே தென்பட்டார்.இந்த அஸ்திரத்தின் மூலம் எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டனர்.இலங்கை முழுவதும் ஒரே அழுகை ஓலமாக இருந்தது.
ராவணன் பற்பலஆயுதங்களையும்,அஸ்திரங்களையும் உபயோகித்தான்.அவற்றை ராமன் செயலிழக்க செய்தார்.ராவணன் தன்னந்தனியாய் ஆயுதமின்றி இருந்தான்.
நிராயுதபாணியான உன்னைக் கொல்ல மனமில்லை.’ இன்று போய் நாளை வா’என ராமன் கூற,ராவணன் அரண்மனை வந்தடைந்தான்.
No comments:
Post a Comment