ராவணன் தன் மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.போர் நடப்பது உறுதியானது.இந்திரஜித்,கும்பகர்ணன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.’ பராக்கிரமம் உள்ளவர்கள் நமது சேனையில் உள்ளனர்.அல்பமான மனிதர்களை பார்த்து பயந்து சீதையை விடுவிப்பது நமது வீரர்களுக்கு அழகு இல்லை.வருவதை எதிர்கொள்வோம்.எதிரியை எளிதில் வெற்றிக்கொள்வோம்’ என்றான் இந்திரஜித்.
கும்பகர்ணனோ…நம்மையே எதிர்க்க துணிந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.சீதையை விடுவித்துவிட்டு சமாதானமாகப் போவதே மேல் ‘என்றான்.
பின் அவன் நீண்ட உறக்கம் கொள்பவன் ஆதலால் உறங்கப் போய் விட்டான்.
இந்திரஜித்துக்கு கும்பகர்ணன் சொல்வது பிடிக்காமல் ‘இத்தனை பயம் உள்ளவன் எங்கள் அரசு குடும்பத்தில் இருப்பது வேதனை.’ என்றான்.
பாம்புகளோடு வாழலாம்,பகைவர்களோடு வாழலாம் ஆனால் நயவஞ்சக சகோதரர்களோடு வாழ இயலாது’ என்றான் ராவணன்..
நகர முடியாத வகையில் இலங்கை பட்டினம் முழுவதும் வானரப் படைகள் சூழ்ந்து இருந்தது.ராவணன் கோபாவசத்தோடு தன் மாளிகையின் மேல் தளத்திற்கு சென்று போய் பார்த்தான்.வானர சேனை முழுவதையும் கொன்று விடும்படி பெரிய சேனை ஒன்றை அனுப்பினான்.அவன் அனுப்பிய ராட்சச சேனை எதிரிகளை தாக்கியது.வானர சேனைகள் கைகளால் பெரிய பாறைகளையும்,மரங்களையும் பிடுங்கி எடுத்து தாக்கியதுஅரக்கர் பலர் மடிந்தனர்.சிலர் பாறைகளில் நசுங்கி மடிந்தனர்.
ராமன், தன் பாணங்களால் ஆயிரக்கணக்கான அசுரர்களை தாக்கி அழித்தார்.நாள் முழுவதும் போர் நடந்த்து.இறுபுறமும் பலர் மடிந்தனர்.சூரியன் மறைந்து இரவு வந்தது.அப்போதும் போர் நிற்கவில்லை.ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டனர்.
ஒருவ்ருக்கொருவர் முகம் பார்க்காமல் சண்டையிட்டார்கள்.
இலட்சுமணன் இந்திரஜித்தை எதிர்த்து போரிட்டான்.
No comments:
Post a Comment