Tuesday 27 December 2022

22. அசோக வனம்


 


மதிலால் சூழப்பட்ட ஒரு சோலையைப் பார்த்தான் அனுமன். ராம மந்திரத்தை உச்சரித்தபடியே சீதையை தேடினான்,

வசந்த காலமாதலால் செடிகொடிகள் பூத்து அழகாக காட்சி அளித்தது.அனுமன் மகிழ்ந்தான்.இங்கு சீதையைக் காண்போம் என அவன் உள்ளுணர்வு சொன்னது.

ஒரு மரத்தின் மீது அமர்ந்து பார்த்தான்.ஓரிடத்தில் அழகிய பெண் ஒருத்தி உடல் இளைத்து ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தாள்.அவளைச் சுற்றி அரக்கியர்கள் கூட்டம்.அதில் திரிசடை எனும் அரக்கியும் இருந்தாள்.அவள் மிகவும் நல்லவள்.சீதையிடம் மிகவும் பிரியம் உடையவளாக இருந்தாள்.சீதை ராமன் பிரிவால் அழுதுகொண்டிருக்க அவளை. சமாதானப்படுத்தினாள்.

அப்போது ராவணன் அங்கு வந்தான்.தன் விருப்பத்திற்கு பணியும்படி சீதையைக்கேட்டான்.

சீதை ராவணனைப்பார்த்து’ அயலார் மனைவியை அடைய நினைப்பது பாவம்.நீ உன் எண்ணத்தை மாற்றிக்கொள்.ராமனிடம் மன்னிப்புக்கேள்’ என்றாள். மேலும் ; இதனால் உன் குலம் விளங்கும்,ராமன் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றுவார்.’ என்று சொன்னாள்.

ராவணன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு,அரக்கிகளிடம் ‘இவளை எப்படியாவது வழிக்கி கொண்டு வாருங்கள்’ என்று கூறிச்சென்றான்.

ராவணன் வந்து சென்றபின் சீதை பலவாறாக ராமனை எண்ணி வருந்தினாள்.தன் உயிரை விடுவதே மேல் என எண்ணினாள்.மரக்கொடிகளை ஒன்றிணைத்து சுருக்கு போட்டு உயிரை விட முடிவு செய்தாள்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அனுமன்,இனியும் தாமதிக்ககூடாது என எண்ணினான்.

‘ராம..ராம..’ என ராமரின் பெயரைக் கூறிக்கொண்டு,சீதை முன்னால் வந்து கைகட்டி வணங்கி ‘தாயே..நீங்கள்தான் ராமனின் பத்தினி சீதாபிராட்டியா? என்றான்.

‘நான் தான் சீதை..நீ யார்? என்றாள்.;தாயே..தசரத சக்கரவர்த்தியார் மகன் ராமன் தங்களுக்கு செய்தி கூறி அனுப்பியுள்ளார்கள்.லட்சுமணனும் தன் வணக்கத்தை கூறியுள்ளார்.ராமரின் தூதன் நான்.அனுமன் என் பெயர்’ என்றான் அனும்ன்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...