Thursday 29 December 2022

யுத்த காண்டம் 26.ராவணனின் ஆலோசனை

 


அனுமன் சீதையை பார்த்துவிட்டு வந்ததால் சீதை இருக்குமிடம் தெரிந்தது.இப்போது அவர்கள் பிரச்சனை இலங்கைக்கு எப்படி செல்வது  என்பதே.

ராமன் சுக்ரீவனுடன் ஆலோசனை செய்தான்.அறிவும் ஆற்றலும் மிக்க பலர் நமது வானர சேனையில் உள்ளனர்.மிகப்பெரிய அளவில் வானர சேனையைக் கூட்டி நாம்  இலங்கை சென்று சீதையை மீட்டு வருவோம் என்று தீர்மாதித்தனர்.

ராமன் அனுமதி அளித்தான்.முழு ஊக்கத்தோடும் துடிப்புடனும் வானரபட்டாளம் முழுதும் தென் கடல் நோக்கி சென்றது.வழியில் காணப்படும் பட்டணங்களையோ,கிராமங்களையோ.மக்களையோ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்று வானர சேனைக்கு அறிவுறுத்தப்பட்டது.பூமியிலிருந்து வான்மூட்டம் அளவுக்குத் தூசி எழும்பும்படி வானர சேனை தென் திசை கடற்கரையை வந்தடைந்தனர்.

இலங்கையில் ராம தூதன் அனுமன் வந்து போனதும் அவனால் ஏற்பட்ட அழிவும்,இறந்து விட்ட வீரர்கள் பற்றியும் இனி வரக்கூடிய ஆபத்து பற்றியும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதும் அனைவரும் ராவணனையும் அவனது ஆற்றலை பற்றியும் புகழ்ந்தனர்.மேலும் விரோதிகளை கொல்வது என முடிவு செய்தனர்.

ராவணன் தம்பி விபீஷணன் ‘ சீதையை ராமரிடம் ஒப்படைத்து விடுவதே நமது குலம் அழியாமல் இருக்க ஒரே வழி என்றார்.’

மேலும், இதனால் பின்னால் ஏற்படும் அழிவிலிருந்து இலங்கையை காப்பாற்றலாம் என்றார் விபீஷணன்.

விபீஷணன் மேல் கோபம் அடைந்த ராவணன்’ நீ என் தம்பி என்பதால் விடுகிறேன்.எதிரியைப் புகழும் நீ என் முன் நிற்காதே.’என கடுமையாகக் கூறினான்.

ராவணனின் கடுஞ்சொல் கேட்ட விபீஷணன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...