Thursday 29 December 2022

28. சேது பந்தனம்

 



இலங்கைக்கு செல்ல வேண்டுமானால் கடலைத்தாண்டி செல்லவேண்டும்.வானர் சேனைகள யாவும் கடலில் அணை கட்டினால் தான் செல்ல முடியும்.

ராமன் கடலரசனை வேண்ட….கடலரசன் ராமன் முன் தோன்றினார்.கடல் மீது பாலம் கட்ட ராமன் அனுமதி கேட்டான்.வானர கூட்டத்தில் விஸ்வகர்மாவின் மகன் நளன் உள்ளான்.இவனது சக்தியால் கடலில் போடப்படும்  கற்கள் மிதக்கும்.எனவே அவன் ஆற்றல் மூலம் அணை கட்டுமாறு கடலரசன் கூறினான்.

(இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 22 கிலோ மீட்டர்)

ராமனின் ஆணைப்படி நளன் பாலம் கட்டத் தொடங்கினான்.வானர வீரர்கள் உதவியுடன் பெரிய பெரிய பாறாங்கற்களையும்,மரங்களையும் வானர சேனை கொண்டு வர 5 நாட்களில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.பின் வானரப்படையுடன் லட்சுமணனும் ராமனும் சென்றனர்.அனுமன் தோள் மீது இருவரும் அமர்ந்து சென்றதால் அனுமன்' சிறிய திருவடி ' என்று அழைக்கப்படுகிறான்.

வானர சேனைகளைப் பார்த்த மால்யவன் என்ற அரக்கன் ராமனிடம் சமாதானம் செய்துகொள்ளும்படி ராவணனிடம் கேட்டான்.ஆனால் அவன் கேட்க வில்லை.இலங்கையின் நான்கு எல்லைகளிலும் காவல் தலைவர்களை நியமித்தான்.

தன் காவலைத் தாண்டி  யாரும் உள்ளே வரமுடியாது என்ற இறுமாப்புடன் இருந்தான்.

ராமன் அன்றிரவு சுவேல மலையில் தங்கி இலங்கை நகரைக் கண்டு ரசித்தான்.ராவணனின் தகாத செயலால் இலங்கை அழியப்போவது நினைத்து வருந்தினான்.சுக்ரீவன் வானில் தாவிச் சென்று அரண்மனையின் கோபுர வாசலை  அடைந்தான்.அங்கே இருந்த ராவணன் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளினான்.யுத்தம் நடந்தது.ராவணன் உடனே மாயச்செயல்களில் இறங்கினான்.

இதனை அறிந்த சுக்ரீவன் மீண்டும் ராமன் இருப்பிடம் வந்தான்.இவ்வாறு திடீரென போரிடக்கூடாது என ராமன் சுக்ரீவனிடம் கூறினான்.

பின்னர் ராமனின் ஆணைப்படி இலங்கையை வானர சேனைகள் சூழ்ந்துகொண்டது.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...