Thursday 29 December 2022

27. விபீஷண சரணாகதி


 


ராமன் இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தான்.விபீஷணன் ராமனை சந்தித்து அடைக்கலம் அ டைய புறப்பட்டான்.

ராமனைக் கண்டதும் பணிந்து நின்றான்.வானரத் தலைவர்களைப் பார்த்து ‘ இவன் யார்.நம்மால் ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றவனா’ எனக் கேட்டான் ராமன்.

சுக்ரீவன்,ஜாம்பவான்,நீலன் முதலியோர் அரக்கனும், ராவணனின் தம்பியுமாகிய விபீஷணனை ராமன் ஏற்றுக்கொள்வது குற்றமாகும் என்றனர்.

ராமன் அனுமனிடம்’அனுமனே, உன் கருத்து என்ன?’ என்றார்.

அனுமன்,’ இவன் நல்லவன்.இலங்கையில் ராவணன் என்னை பிடித்துக் கொல்லும்ப்டி உத்தரவிட்டான்.விபீஷணன் ஒருவனே எனக்கு தீங்கு செய்தால் ஆகாது என்றான்.அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமுடையவன்.இவன் வரவை ஏற்றுக்கொள்ளலாம் என்றான்.

அனுமன் சொல்வதைக்கேட்ட ராமன் ‘அடைக்கலம் என வந்தவனை…அவன் யார் என்று பார்ப்பது நம் கொள்கையல்ல…’இவனுக்கு நாம் அடிக்கலம் தந்தோம்’ என்றார்.

சுக்ரீவன் உடன் விபீஷனிடம் சென்று அன்புடன் தழுவினான் ராமர் அவனுக்கு அடைக்கலம் தந்ததைக் கூறினார்.

‘சீதையை கடத்தி சென்றவனின் தம்பியாகிய என்னை ராமன் ஏற்றுக்கொள்வதா’ என வியப்புற்றான் விபீஷணன்.

விபீஷணன் ராமனின் பாதங்களில் விழுந்து வண்ங்கினான்.

ராமன் அவனிடம்’ என் பெயர் எதுவரை நிலைத்து நிற்குமோ அதுவரை இலங்கை செல்வம் முழுதும் உனக்கே அளிப்பேன் ‘ என்றார்.

பின் விபீஷணனோடு சகோதரர்களில் எழுவர் ஆனோம் என்றார்.

(இதற்கு முன் குகனை ஐந்தாவது சகோதரன் என்றும்,சுக்ரீவனை ஆறாவது சகோதரர் என்றும் கூறியுள்ளார்.)


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...