வானரத்துக்கு வால் தான் அழகு.வாலில் பழந்துணிகளைக் சுற்றி எண்ணெயில் தோய்த்து கொளுத்தி விட்டு…அனுமனைக் கட்டி வீதியெங்கும் அழைத்து சென்றார்கள்.இதை அறிந்த சீதை “ஏ” அக்னியே…அனுமனுக்கு துன்பம் நேராமல் காப்பாயாக’ என வேண்டினாள்.
சீதையின் வேண்டுகோளின் படி அக்னிதேவன் அனுமனை ஒன்றும் செய்யவில்லை.எரியும் வாலுடன் அனுமன் திடீரென பேருரு கொள்ள எழுந்தான்.அனுமனின் கட்டுகள் விலகின.அரக்கர்கள் ஓடி ஒளிந்தனர்.அனுமன் ஒவ்வொரு மாளிகையாக தாவித்தாவி சென்றான்.காற்று வீசியது.நகரெங்கும் தீப்பிடித்து எரிந்தது.இலங்கை நகரமே தீக்கிரையாயிற்று..
திரிகூட மலை மீது ஏறி நின்று அனுமன் இலங்கை தகனத்தைக் கண்டு மகிழ்ந்தான்,கடலில் மூழ்கி வாலில் இருந்த நெருப்பை அணைத்துக்கொண்டான்.
அங்கிருந்து மீண்டும் தாவி வானரவீரர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான்.வானர வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தான் சென்று வ்ந்த செய்தியை எல்லாம் அவர்களுக்கு கூறினான்.
பின் ராமனை சந்தித்த அனுமன் ‘கண்டேன் சீதையை’ என்றான்.அனுமன் சீதையின் நிலையை ராமனுக்கு கூறினான்.தான் சென்று வந்த வரலாற்றைக் கூறினான்.இலங்கை பற்றியும் ராவணன் பற்றியும் கூறினான்.இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தன்னை சீதை அழைத்துக்கொள்ள சொன்னதை கூறினான். சூடாமணியைக் கொடுத்தான்.ராமன் அதை கண்களில் ஒற்றிக்கொண்டு சீதையை பார்த்தது போல் மகிழ்ந்தான்.
(சுந்தர காண்டம் முற்றிற்று.)
No comments:
Post a Comment