Sunday 25 December 2022

24.ராம தூதன் நான்




 இந்திரஜித் பெரும் படையுடன் அனுமனை பிடிக்க வந்தான்.இந்திரஜித் அனுமனுடன் பெரும் போர் புரிந்தான்.இருவரும் சமபலம் பொருந்தியவர்கள்.அதனால் வெற்றி-தோல்வி மாறி மாறி இருந்தது.இந்திரஜித் பிரமாஸ்திரத்தை அனுமன்  மேல் ஏவினான்.பிரமாஸ்திரத்திற்கு அனுமன் ஒரு நாழிகை கட்டப்பட வேண்டும் என்பது விதி.அதற்கு மேல் பிரம்மாஸ்திரம் அனுமனை ஒன்றும் செய்யாது என்று அவன் பெற்ற வரமாகும்.அனுமன் ராவணனைக்கண்டு உபதேசம் செய்ய எண்ணினான். எனவே பிரமாஸ்திரத்திற்கு கட்டுபட்டு இந்திரஜித்துடன் ராவணனின் அரண்மணைக்கு சென்றான்.

ராவணன் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தான்.குரங்கே நீ யார்….உண்மையைச் சொல் என்றான்.அனுமன் ராவணனை நோக்கி ‘ நான் ராமதூதன்’சுக்ரீவனின் அமைச்சன்.சீதையைக் காணவந்தேன்,இப்போது சீதையைக்  கண்டேன்.

சீதையை நீஅபகரித்து வந்தது தவறு.இதனால் உன் குலம் அழிவதற்கு காரணமாகும்..நீ அழிந்து போகவேண்டாம்.உன் நன்மைக்காகவே சொல்கிறேன்.ராமனிடம் சரண் அடைவதே நல்லது என தைரியத்துடனும் விளக்கமாகவும் கூறினான்.

இது கேட்ட ராவணன் கடுங்கோபம் கொண்டு ‘ இந்த குரங்கை கொல்லுங்கள்’ என உத்தரவிட்டான்.ராவணனின் தம்பி விபீஷணன் தூதனாக வந்தவனை கொல்லக்கூடாது.ஏதாவது அங்கஹீனம் செய்து அனுப்பலாம் என்று அறிவுரை கூறினான்.


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...