Sunday 25 December 2022

18.வாலி வதம்




ராமன் சுக்ரீவனிடம் வாலியை சண்டைக்கு அழைக்குமாறும் அவனுடன் சண்டை செய்துகொண்டு இருக்கும்போது மறைந்து நின்று தாக்குவதாகவும் கூறினார்.

சுக்ரீவன் உடனே வாலியை போருக்கு அழைத்தான்.

வாலியும் பாய்ந்து வந்தான்.

கடும் போர் நிகழ்ந்தது.முடிவில் சுக்ரீவனை வாலி அடித்து வீழ்த்தினான். சுக்ரீவன் அடிபட்டு,வேதனைப்பட்டு ரிஷிமுக பர்வதம் ஓடி வந்தான்.

ராமா’ இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணலாமா? ‘ உன் வீரத்தைக் கண்டு மெச்சினேன்’. இதுவா உன் வீரம்’ எப்படி அடிபட்டு வந்துள்ளேன் என அழுது புலம்பினான்.

ராமன்’..சுக்ரீவா..கவலைப்படாதே..நீயும் உன் சகோதரன் வாலியும் ஒரே மாதிரி இருந்ததால் தான் இந்த குழப்பம்.யார் நீ? யார் வாலி என்ற அறிய முடியவில்லை. நீ இந்த  மாலையை அணிந்துகொண்டு வாலியுடன் யுத்தம் செய்..இன்று வாலி தொலைந்தான்..கவலைப்படாதே என தேற்றினார்..சுக்ரீவன் ராமன் பேச்சைக்கேட்டு தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டான்.

மறுநாள் ராமன் அணிவித்த மாலையை ‘ வெற்றி மாலையாக’ அணிந்துகொண்டு வாலியை யுத்தத்திற்கு அழைத்தான்.வாலியும் வந்திருப்பது தன் தம்பி தான் ஆயினும் இவ்வளவு அடிபட்டும் இன்று என்னுடன் போருக்கு வந்துள்ளானே..என்று ஆச்சிரியப்பட்டான்.

தாரை..வாலியைப்பார்த்து போருக்கு செல்லவேண்டாம்.ஏதோ ஒரு பலம் பின்னால் இருக்கிறது.இல்லாவிடில் நம்முடன்  மீண்டும் சண்டையிட வருவானா? எனவே இம்முறை நமக்கு ஆபத்து  நிச்சயம் போர் வேண்டாம் என தாரை தடுத்தாலும்,

வாலியோ யாராக இருந்தாலும் என் முன் நிற்க யாருக்கும் துணிச்சல் கிடையாது.ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி சுக்ரீவனுடன் போருக்கு புறப்பட்டான்

சுக்ரீவனும் வாலியும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இனி ஒரு கணம் தாமதித்தாலும் சுக்ரீவனைவாலி கொன்றுவிடுவான் என ராமன் எண்ணினான்.மரத்தின் மறைவில் நின்று கொண்டு ராமன்  வாலியின் மீது  பாணம் தொடுத்தார் . வாலி தன் மீது யார் பாணம் தொடுத்தார் என சுற்றும் முற்றும் பார்த்தான்.

ராமன் அவன் அருகே வந்தான்…..வாலி ராமரிடம்….’தசரதா…இது உனக்கு அடுக்குமா..நீ இப்படி மறைந்து நின்று பாணம் விட்டது வீரனுக்கு அழகா? என்றவாறு ராமனை இகழ்ந்தான்.


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...