சுந்தர காண்டம் ராமாயணத்தில் மிகவும் சிறந்த பகுதியாகும்.பலர் தினமும் இக்காண்டத்தை மனப்பாடம் செய்வதுண்டு.அனுமன் சீதையைக் கண்டது அனுமனின் வீரதீர செயல்கள் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பேர் உருக்கொண்ட அனுமன்,மகேந்திர் மலையின் மீது நின்றான்.தெற்கு நோக்கினான்..இலங்கை தெரிந்தது.எப்படியும் இலங்கை சென்று சீதையைக்காண்பேன் என உறுதி பூண்டு தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
பின், ராம நாமத்தைக் கூறிக்கொண்டு மகேந்திர மலையைத் தன் கால்களால் உதைத்து உயரே கிளம்பினான் வாயு மைந்தன்.அனுமன் ஆகாயத்தில் தாவுவதை காணும்போது பறப்பது போல இருந்தது.கடலைத் தாண்டி விடுவோம் என்ற உறுதி இருந்தது.
வழியில் பல சோதனைகள்.அவைகளை திறமையாக சமாளித்துக்கொண்டு கடலைத்தாண்டி இலங்கையில் காலடி வைத்தான்.தான் சேர வேண்டிய இடம் வந்துவிட்டதாலும்,தன் பெரிய உருவத்தைக் கண்டு ஏதேனும் ஆபத்து நிகழலாம் என எண்ணி தனது வடிவத்தை சுருக்கி சாதாரண வடிவத்தோடு மலை மீது வந்து நின்றான்.
இலங்கை நகரம் அழகாக இருந்தது.மலைகள்,சோலைகள்,ஆறுகள் முதலியவற்றைக் கண்டான்.அனுமனுக்கு இலங்கை தேவலோகம் போலக் காட்சி தந்தது.இவ்வளவு பெரிய நகரில் சீதையை நான் எங்கு தேடுவேன் என் திகைத்தான்.
குரங்கு வடிவம் எடுத்துக்கொண்டு இரவு வரை காத்திருந்தான்.இரவு வந்ததும் கோட்டை வாயில் நோக்கி சென்றான்கலசங்கள் பூண்ட காவலாளிகள் பலர் காவல் காத்து நின்றனர்.ராம நாமத்தை சொல்லிக்கொண்டே பல இடங்களில் சீதையைத் தேடினான்..
ராவணனின் அரண்மனைக்கு சென்றான்.அந்தபுரம் சென்றான்.அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கண்டான்.இராவணன் பத்து தலைகள் இருவது கரங்களுடன் உறங்குவதைப் பார்த்து அதிசியம் அடைந்தான்.அவனது மார்பில் விழுப்புண்களைக் கண்டு வீர மிக்கவன் ராவணன் என உணர்ந்தான்.
ராவணனின் அந்தபுரம் சென்றான்.அங்கு ராவணனின் மனைவி மண்டோதரி உறங்கிக்கொண்டிருந்தாள்.ஒரு கணம் இவள் சீதையாக இருப்பாளோ? என நினைத்தான்.தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.சீதை அந்தபுரத்தில் மஞ்சத்தில் படுத்திருப்பாளா? நிச்சயம் சீதை இல்லை என மனம் தெளிந்து சீதையை பல இடங்களில் தேடி அலைந்தான்.
No comments:
Post a Comment