ராமன் வாலியை மறைந்து நின்று தாக்கியதற்காக வருந்துவதாகவும்,இல்லாவிடில், உன் எதிரில் வ்ந்து போரிட யாராலும் முடியாது.நீ அப்படி வரம் பெற்றுள்ளாய்.எனவே அப்படி செய்தேன்.நீ உன் சகோதரனுக்கு செய்த கொடுமையாலேயே உனக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாயிற்று என கூறினான்.
பின் வாலி ராமனிடம் அவர் கையால் மரணமெய்வது பாக்கியம் என்றான்.
தான் உயிர் துறப்பது உறுதி என்பதை அறிந்தான்.ராமனிடம் சுக்ரீவன் எந்த தப்பு செய்தாலும் மன்னித்துவிட வேண்டினான்.
வாலியின் உயிர் பிரிந்தது. வாலி மறைந்த செய்தி அறிந்த தாரை அங்கு வந்து அழுதாள்.அவளது மகன் அங்கதனும் அழுதான்.அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.அங்கதன் வாலிக்கு இறுதி சடங்குகளைச் செய்தான்.
சுக்ரீவன் முடிசூட்டிக்கொண்டான்.அங்கதனும் இளவரசு பட்டம் ஏற்றான்.
சீதை நிலை குறித்து ராமன் வருந்தினான்.மழைகாலம் முடிந்தது.
ஒருநாள் சுக்ரீவன் அரச காரியங்களை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு மது மயக்கத்தில் இருந்தான்.மழைகாலம் முடிந்ததும் ராம காரியத்தில் ஈடுபடவேண்டும் என சிறிதும் நினைக்கவில்லை.
லட்சுமணன் தன் வில்லின் நாணை அசைத்தான்.வில்லிலிருந்து புறப்பட்ட ஓசை இடி இடித்தது போல கேட்டது.சுக்ரீவன் அது கேட்டு மயக்கம் தெளிந்தவனாய் ராமனின் பாதத்தில் வந்து பணிந்து…பிழையை மன்னிக்க வேண்டி..சீதையைத் தேடும் பணியில் உடனே ஈடுபடுவோம் என்றான்.
பின் தன் படை வீரர்களை ஒன்று திரட்டி சேனாதிபதிகளை நியமித்தான்.எட்டு திசைகளுக்கும் அவர்கள் சென்று சீதையைத் தேடும்படி கூறினான்.
‘ராமா… என்பெரிய சேனை உன் கட்டளையை சிர மேற்கொண்டு செயல் படுவார்கள்’ என்றான்.
ராமன் அனுமனை அழைத்து ‘ வாயு..மைந்தா உன்னால்தான் இந்த வேலை நடைபெறவேண்டும்.வீரம்,புத்திஉபாயம்.அறிவு அனைத்தும் உன்னிடம் உள்ளன.சீதையை தேடி கண்டுபிடிப்பது உனது வேலை என்றான்.
No comments:
Post a Comment