Thursday 24 November 2022

2. விசுவாமித்திரர்




தசரதன் மூத்த பிள்ளையான ராமனிடம் அளவற்ற பாசம் வைத்திருந்தான்.

பிள்ளைகள் நால்வரும் வசிஷ்டரிடம் குருகுல வாசம் முடிந்து அயோத்திக்கு வந்தனர்.

ஒருநாள் விசுவாமித்திர மகரிஷி அயோத்திக்கு வந்தார்.தசரதன் அவரை வணங்கி ..'நீங்கள் என் அரண்மனைக்கு வந்தது என் பாக்கியம்.." தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் தருகிறேன்" என்றார்.

உடனே விசுவாமித்திரர்" நான் யாகம் செய்ய உள்ளேன்." அந்த யாகத்தை தாடகை,சுபாகு போன்ற அசுரர்கள் அழிக்க உள்ளனர்.இவர்களிடமிருந்து யாகத்தைக் காப்பாற்ற உன் பிள்ளை ராமனை என்னுடன் அனுப்பு என்றார்.

"எனது மகனை அனுப்புவதா, அவன் சிறுவன்.நான் வேணுமென்றால் உங்களுடன் வந்து யாகத்தை காத்து அருளுகிறேன்." என்றார்.

அதற்கு விசுவாமித்திரர்.."தசரதா வாக்கு மீறக்கூடாது" நீ எது கேட்டாலும் தருகிறேன் என்றாய்.நீ எனக்கு வேண்டாம், ராமன் தான் வேண்டும்." என்றார்.

வசிஷ்டர் தசரதனிடம்" ராமனை அவருடன் அனுப்பிவை. இதனால் பல நன்மைகள் உண்டாகும் என்று சொல்ல,ராமனையும் லட்சுமணனையும் விசுவாமித்திரருடன் காட்டுக்கு அனுப்பினார் மன்னன்

ராமனும்,லட்சுமணனும் விசுவாமித்திரருடன் சென்றனர்.பசி,தாகம் இல்லாமல் இருக்க பலை,அதிபலை என்ற மந்திரத்தை விசுவாமித்திரர் அவர்களுக்கு உபதேசித்தார்..

சரயு நதிக்கரையில் அவர்கள் தூங்கினர்.பின் அவர்களை அழைத்து செல்கையில் வழியில் தாடகைஎனும் அரக்கி வழிமறித்தாள்.

விசுவாமித்திரர் அவள் ஒரு அரக்கி அவளைக் கொல் என்றதும் ஒரே பாணத்தில் தாடகியை வதம் செய்தார் ராமன்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...