Wednesday 23 November 2022

பாலகாண்டம்



 1.இராமன் பிறந்தான்.

உலகத்திலேயே முதல் காவியமாக சொல்லப்படுவது இராமாயணம் ஆகும்.

"ராமா"என்ற சொல் மோட்சத்தை தரக்கூடியதாக உள்ளது.

இராமாயணம் என்றாலே இராமன் இருக்குமிடம் எனப்பொருள்.

இட்சுவாகு வம்சத்தில் பிறந்தவன் ராமன்.உயர்ந்த குணங்களோடு கூடிய இராமரின் சரித்திரத்தை சிறுவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இட்சுவாகு வம்சத்தின் மகரிஷிகளுக்கு இணையானவன் தசரதன்.

அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.அவர்கள் கோசலை,கைகேயி,சுமித்திரை ஆகியவர்கள்.

தசரதன் தனக்கு மகன்கள்  இல்லை என்று வருத்தப்பட்டான்.

அதற்காக ரிஷ்யசிங்கர் என்ற மகரிஷியின் தலைமையில் யாகம் செய்தான்.

யாகத்தின் முடிவில்,அக்னி தேவன் பாயசம் நிறைந்த பொற்கலசத்துடன் தோன்றினான்.அக்னிதேவனின் ஆணைப்படி பாயசத்தை தன் மூன்று மனைவியருக்கும் வழங்க அவர்கள் கருவுற்றனர்.

இராவணன்,கும்பகணன் போன்ற அசுரர்களால் உலகம் அழிந்தது.இராவணன் பல அரிய வரங்களைப்பெற்று விளங்கினான்.அவன் மனிதர்கள் யாரையும் மதிப்பதில்லை..ஆகவே மனிதனைத்தவிர மற்ற எல்லா உயிர்களிடத்தும்,ஆயுதங்களாலும்,தேவர்களாலும் அழியாத வரம் பெற்று வாழ்ந்தான்.

மனிதர்கள் செய்யும் யாகம்,தவம் இவற்றால் தேவர்கள் திருப்தி அடைகின்றனர். இதனால் பூலோக மக்களை தேவர்கள் வாழ்த்துகின்றனர்.தர்மங்களுக்கு அழிவு நேரும்போது இறைவன் அவதரிக்கிறான் இராவணன்,கும்பகர்ணர்களை அழிக்க மகாவிஷ்ணு மனித வடிவில் அவதரித்து அரக்கர்களை அழித்து மனித வர்க்கத்தை காப்பாற்ற எண்ணினார்.

தனக்கு துணையாக தேவர்களை...அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுக்கச்செய்தார்.பகவான் மகாவிஷ்ணு தசரதனின்மனைவி கோசலைக்கு மகனாக அவதரித்தார்.

கைகேயிக்கு பரதனும்.சுமித்திரைக்கு இலட்சுமணனும்,சத்துருக்கனும் பிறந்தனர்,

பகவான் அவதாரத்தை தேவர்கள் அனைவரும் மலர்தூவி வாழ்த்தினர்.

நான்கு குழந்தைகளும் பிறந்து வளர்ந்தனர்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...