Saturday 26 November 2022

3. ஜனகரும்..சீதையும்

 


விசுவாமித்திரர் தன் யாகத்தை துவங்கினார்.ராமரும்  லட்சுமணனும்  யாகத்தை இரவு  பகலாக காவல் காத்தனர்.

சுபாகு,மாரீசன் என்ற இரு  அசுரர்களும் மாமிசம்,இரத்தம் போன்றவற்றை யாகத்தில் இட்டு யாகத்தை அழிக்க முயன்றனர்.ராமன் தன் அம்புகளால் பந்தலிட்டு யாகத்தை  காத்தருளினார். மேலும் மாரீசனை ஓட.ஓட விரட்டி அடித்தார்.சுபாகுவைக் கொன்றார்.யாகம் சிறப்பாக நடந்தது.

விசுவாமித்திரர்...அவர்களை அழைத்துச் செல்லும் வழியில் கௌதமர் எனும் மகரிஷியின் ஆசிரமம் இருந்தது.அங்கு இருந்த கல்லில் அவரது பாதங்கள் பட்டதும்  ..அதுவரை கல்லாய் இருந்த அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். கௌதமர் அவளை தன் குடிலுக்கு அழைத்துச்சென்றார்.

ராம லட்சுமணரை விசுவாமித்திரர்  மிதிலை நகருக்கு அழைத்துச் சென்றார்.மிதிலையில் மக்கள் வழி நெடுக நின்று ராம,,லட்சுமணர் அழகைக் கண்டு மகிழ்ந்தனர்.

மிதிலை நகரில் மன்னர் ஜனகனுக்கு சீதை என்றொரு மகள் இருந்தாள்.சீதை யாகபூமியை உழுதபோது பூமியிலே தோன்றியவள்.

சீதை திருமண வயது அடைந்தாள்.மன்னன் ஜனகன் ஒரு பந்தயம் வைத்தார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...