Sunday 27 November 2022

4. பரசுராமர் வில்லை வளைத்த ராமன்



 ஜனகனிடம் சிவ தனுசு ஒன்று இருந்தது.அந்த சிவ தனுசை யார் நாண் ஏற்றி துளைக்கிறார்களோ...அவருக்குத்தான் சீதையை மணமுடிப்பேன் என்று சொல்லியிருந்தார் ஜனகர்.

எத்தனையோ நாட்டு இளவரசர்கள் வந்து சிவ தனுசை தூக்கக்கூட முடியாமல் சென்றுவிட்டனர்.

அந்த சமயம் விசுவாமித்திரர் ராம லட்சுமணனுடன் வந்தார்.சீதை ராமரது  அழகைக்க்ண்டு மகிழ்ந்தாள். ராமரும் அப்படியே.

விசுவாமித்திரர்..:ராமா..வில்லை தூக்கிப்பார் என்றார்.ராமர் கையில்  வில்லை எடுத்து நாண் ஏற்றினார்.வில் இரண்டாக உடைந்தது.ஜனகன் மகிழ்ந்து சீதையை ராமருக்கு மணமுடித்தார்.

அத்துடன் தனது  மகள் ஊர்மிளாவை லட்சுமணனுக்கும் ,பரத னுக்கு மாண்டவியையும்,சத்ருக்கனுக்கு சுககீர்த்தியையும் மணம் செய்வித்தார்.

திருமணம் முடிந்து வரும்போது பல துர் நிமித்தங்கள் நிகழ்ந்தன.விசுவாமித்திரர் தசரதனிடம் ஏதோ ஒரு ஆபத்து வருகிறது..ஆனால் அது விலகும் என்று கூறினார்.அப்போது சத்திரியர்களை அழிக்க சபதம் பூண்ட பரசுராமர் எதிரே வ்ந்தார்.

பரசுராமர்,ராமனிடம்..."நீ சிவன் வில்லை வளைத்தது பெரிதல்ல...இது விஷ்ணுவின் வில்,இதையும்வளைத்துக்காட்டு' என்றார்.

ராமர் அந்த வில்லை வாங்கி வளைத்தார்.

'இந்த வில்லுக்கு என்ன இலக்கு' என அவரிடம் கேட்டான்.

தன் பசு,பலன் எல்லாவற்றையும் ராமனுக்கு அளித்து பரசுராமர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

இதனிடையே கைகேகியின் மாமன் தன் பேரன் தன்னுடன் சிறிது காலம் தங்கவேண்டும் என கேட்க ..பரதனும்,சத்ருக்கனும் சேர்ந்து கோசலை நாட்டில் தங்கி இருக்க தசரதர் அங்கு வ்ந்தார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...