Wednesday 14 December 2022

கிஷ்கிந்தா காண்டம்


 


16. அனுமன் சந்திப்பு

பம்பை நதிக்கரை ரம்யமாக இருந்தது.ஆறு,குளம்,காடு,மிருகங்கள்,பறவைகள் ஆகியவற்றைக் கண்டபோது ராமனுக்கு சீதை தன் அருகில் இல்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது.

ராமரும் லட்சுமணனும் வில் பிடித்து இங்கும் அங்கும் உலாவுவதை சுக்ரீவன் கண்டான்.

தன் தமையன் வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் வாழ்ந்துவந்த சுக்ரீவனுக்கு வாலி தான் மாறுவேடம் பூண்டு வந்துவிட்டானோ என்ற பயம் ஏற்பட்டது.

அனுமன் சுக்ரீவனின் அமைச்சன் ஆவான்.வந்திருப்பவர்கள் வாலியின் ஆட்களோ….அல்லது வாலியோ அல்ல.நான் நேரில் சென்று  யார்? என விசாரித்து வருகிறேன் …என்று கூறினான்.

பின் அழகிய மானிட வடிவம் கொண்டு ராம,லட்சுமணர்கள் முன்னால் வந்து நின்று..’ நீங்கள் தவ முனிவர்கள் போல இருக்கிறீர்கள்.ஆனால் உங்கள் கைகளில் வில்லும் அம்பும் வைத்துள்ளீர்கள்.நீங்கள் தேவர்களா அல்லது அசுரர்களா என அறிய  வந்திருக்கிறேன்.நான் இப்பகுதியை ஆண்டுவரும் சுக்ரீவன் என்ற வானர அசுரனின் மந்திரி.என் பெயர் ‘அனுமன்’ என்றான்.

அனுமன் சொன்னதைக் கேட்ட லட்சுமணன் அனுமன் சிறந்த. அறிவாளியாக இருக்கிறான்.ஒரு வேளை அவன் சிவபெருமானோ அல்லது பிரம்மனோ என்று நினைத்தான்.

ராமன் தன் தம்பி லட்சுமணனிடம் நாம் யாரைத்தேடி வந்தோமோ அவனே நம்மை தேடி வந்துள்ளான் என்றான்.

ராமரும் லட்சுமணனும் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதையும்,சீதையைத் தேடி வந்ததையும் கூறினார்.அனுமன் சுக்ரீவன், வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் உள்ளதாகவும்,ரிஷிமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாமல் சாபம் உள்ளதையும்,சுக்ரீவனுக்கு வாலி கொடுமை  செய்துள்ளான் என்பதையும் எடுத்துக் கூறி சுக்ரீவனின் நட்பை பெற்று சீதையை தேடி அடையுமாறு யோசனை கூறினான்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...