லட்சுமணன் பர்ணசாலையை விட்டு அகன்றதும் ராவணன் சந்நியாசி உருவம் தாங்கி பர்ணசாலைக்கு வந்தான்.சீதையிடம் பிட்சை கேட்டான்.
லட்சுமணன் போட்ட கோட்டை தாண்ட ராவணனால் முடியவில்லை.சீதையை குடிலுக்கு வெளியே வந்து பிட்சை இடுமாறு கேட்டான்.
சீதையும் லட்சுமணன் போட்ட கோட்டை தாண்டி வந்தாள்.உடனே ராவணன் பர்ணசாலையுடன் பெயர்த்து சீதையை தூக்கி சென்றான்.
ராவணன் சீதையை இலங்கை நகருக்கு தூக்கி சென்றான்.வழியில் சீதை ‘ என்னை காப்பாற்றுங்கள்’ என கூவிக்கொண்டே சென்றாள்..வழியில் அவள் தன் நகைகளை கழற்றி ஒரு முடிச்சாக கட்டி அதனை கீழே எறிந்தாள்.இது தன்னை தேடி வரும் சமயம் ராமனுக்கு வழியறிய உதவும் என எண்ணினாள்.
மாரீசனை கொன்ற இடத்துக்கு லட்சுமணன் ஓடி வந்தான்.ராமன் ‘ தம்பி நான் நினைத்தவாறே நடந்துவிட்டது..நாம் சீதையை தனியாக விட்டுவிட்டு வந்தது தவறு,இதே நேரம் சீதைக்கு என்ன துன்பம் நேர்ந்ததோ என்று கூறிக்கொண்டே பர்ணசாலைக்கு விரைவாக திரும்பினார்கள்.
அங்கே பர்ணசாலையைக் காணவில்லை.
No comments:
Post a Comment