வேதனை அடைந்த சூர்ப்பனகை இலங்கை வேந்தன் இராவணனிடம் சென்றாள்.அவளுக்கு ராமனை பழிவாங்கும் எண்ணமே இருந்தது.
இராவணனின் பாதங்களில் விழுந்தாள்.சீதையின் அழகைக்கூறி இராவணனிடம் சீதையின் மீதான ஆசையை உண்டாக்கினாள்.சீதையை உனக்காக எடுக்கப்போனபோது இவ்வாறு அவமானபட்டேன் என்றாள்.
சூர்ப்பனகை மூலம் சீதையின் அழகை கேள்விப்பட்ட இராவணன் அவளை தூக்கிவர திட்டமிட்டான்.
இதற்காக மாரீசனிடம் மாயமானாக மாறி ராமனையும்,லட்சுமணனையும் தனியே பிரித்து வைக்குமாறு கேட்டான்.
இதற்காக மாரீசன் புள்ளிமான் வடிவம் கொண்டான்.மானின் ஒவ்வொரு புள்ளியும் தங்கம் போல தகதக என மின்னியது.
சீதை மானைப்பார்த்ததும்’எனக்கு இந்த அழகிய மானை பிடித்துக் கொடுங்கள்’ . நான் இதனை ஆசிரமத்தில் கட்டி வளர்க்கிறேன்’ என்றாள்.
மாயமானை பிடிக்க ராமன் சென்றபோது,மாயமான் அவரது பிடிக்கு சிக்காமல் ராமனை நெடுந்தொலைவு அழைத்து சென்றது.ராமன் அந்த மானைக் கொல்ல அம்பு எய்தினான்,மாயமானோ..லட்சுமணா…சீதே…என பலமாக ராமனின் குரலில் கூவி உயிரைவிட்டது.
சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணினாள்.
‘’லட்சுமணா…ராமனுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டது.உடனே போய் பார்’ என்றாள்.
லட்சுமணன் சீதையை ஆறுதல் படுத்தினான்.’ராமருக்கு ஒரு ஆபத்தும் வராது….கவலைப்படாதீர்கள் என்றான்.
சீதை லட்சுமணனைப் பார்த்து பல தகாத வார்த்தைகள் கூறினாள்.
லட்சுமணன் பர்ணசாலையை சுற்றி அம்பினால் கோடு போட்டான்.எக்காரணம் கொண்டும் இக்கோட்டை தாண்டீ வராதீர்கள் என எச்சரித்துவிட்டு ராமனைத்தேடி சென்றான்.
No comments:
Post a Comment