சீதையை ராமனிடம் அழைத்து வந்தனர்.ராமன்,சீதையிடம் ராவணன் உன்னை தூக்கிசென்றான்.பல மாதங்கள் சிறைப்படுத்தி வைத்திருந்தான்.அவன் உன்னை காமத்தோடு பார்த்தான்.அதனால் நீ தீட்டு பட்டு விட்டாய்.அதனால் என்னால் உன்னோடு சேர்ந்து இருப்பது இயலாது.ராவணன் மரணம் என்னால் நிகழவேண்டும் என்பது விதி.அதற்காக அவனிடம் போரிட்டேன்.இனி நீ உனக்கு விருப்பமான இடம் தேடிச் செல்’ என்றான்.
எவ்வளவுதான் சீதை பாதுகாப்பாக இருந்தாலும் உலகம் பழி சொல்லுமே ‘நான் என் மனிதத்தன்மையை நிரூபிக்க இக்கணமே தீயில் என் உயிரை விடுகிறேன்’ என்றாள்’ சீதை.ராமர்,லட்சுமணனை தீ மூட்டி கொடுக்கும்படி சொன்னார்.சீதை,’ அக்னிதேவா,நான் பத்தினி என்பது உண்மையானால் நீயே சாட்சியாக இருப்பாயாக.இல்லாவிடில் என்னை பொசுக்கிவிடு’ என்று கூறி அக்னியை மூன்று முறை வலம் வந்து அதில் புகுந்தாள்.
அப்போது அனைவரும் கண்ணீர் விட அக்னிதேவன் தோன்றினான்.அவன் ராமனிடம் ‘சீதை தூய்மையானவள் அவளை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.அவளை நீ ஏற்பதே முறை என்றான்.சீதை தீக்குண்டத்திலிருந்து வெளியே வர,ராமன் சீதையை ஏற்றான்.
வானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.ராமன்,சீதாராமனாக காட்சி அளித்தார்.சொர்கத்திலிருந்தும் தசரதர் வந்திருந்து ராமனை வாழ்த்தினார்.பின் அவர் ராமனிடம் ‘அயோத்தி சென்று ஆட்சி புரி’ என்று கூறினார்.
தந்தை சொல் மிக்க ராமன் அயோத்திக்கு வருவதை அனுமன் மூலம் சொல்லி அனுப்பினார்.
No comments:
Post a Comment