Tuesday 10 January 2023

37. ராவணன் இறந்தான்




 ராவணனின் தலை வெட்ட மற்றொரு தலை முளைத்தது.விபீஷணன் தன் அண்ணன் ராவணனை அவன் மார்பில் குறிவைத்து அம்பு எய்தும்படி கூறினான்.ஏனெனில் அவனது மார்பில்  அமிர்த கலசம் உள்ளது.அதனை தகர்க்கவேண்டும்.அப்போதுதான் ராவணன் மரணம் சம்பவிக்கும்.இப்போது ராவணனை கொல்வது தவிர வேறு வழியில்லாததால் பிரம்மாஸ்திரத்தை ராமன் ராவணன் மீது பிரயோகித்தான்.அது ராவணனின் மார்பில்  துளைத்து சென்று மீண்டும் ராமனிடமே வந்தடைந்தது.ராவணன் கீழே விழுந்து இறந்தான்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.விபீஷணன் அரக்கர்கள் கூட்டத்தில் பிறந்தவன் எனினும், அவனிடம் தேவ குணங்கள் நிரம்பி இருந்தன.தன் அண்ணனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை.கதறி அழுதான்.ராமன் அவனை தேற்றினான்.ராவணனுக்கு விபீஷணன் ஈமச்சடங்குகளை செய்து முடித்தான்.பிறகு ராமன்  எண்ணப்படி இலங்காபுரிக்கு  விபீஷணனை அரசனாக நியமித்து முடிசூட்டினான்.இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை ராமன் சீதைக்கு அனுமன் மூலம் கூறி அனுப்பினான்.

சீதை மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.தான் இப்போதே ராமனுடன் இணங்கி இருக்க ஆவலுடன் உள்ளதாக தெரிவித்தாள்.சீதையை அரண்மனையில் உள்ள பெண்கள் நீராட்டி அழகிய ஆடை அணிவித்து ராமனிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

ஆனால் சீதையோ தன் தவக்கோலத்திலேயே ராமனிடம் வருவதற்கு விரும்பினாள்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...