Monday 9 January 2023

36. ஆதித்ய ஹிருதயம்

 



ராம,ராவண யுத்தம் உக்ரமான வகையில் நடந்தது.லட்சுமணன்,ராவணனின் சாரதியை தாக்கி கொன்றான்.அதேவேளையில் ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளை விபீஷணன் கொன்றான்.ராவணன் மூர்க்கத்தனமாக ரதத்திலிருந்து குதித்து விபீஷணனின் மீது சக்தி வாய்ந்த ஆயுதத்தை பிரயோகித்தான்.லட்சுமணன் திடீரென்று இடையில் பாய்ந்து அந்த ஆயுதத்தை தானே ஏற்றிக்கொண்டான்.லட்சுமணன் உணர்ச்சியின்றி தரையில் விழுந்தார்.

ராமன், லட்சுமணனின் நெஞ்சில் இருந்த அம்பை திறமையுடன் பிடுங்கி எடுத்தான்.தம்பியின் முகத்தைப்பார்த்தான்.உயிர் இருக்கும் அறிகுறி இல்லை.உடன் ராமன் கதறி அழுதார்.லட்சுமணன் இல்லாத வாழ்க்கை பொருளற்றதாக திகழ்ந்தது.

மருத்துவர் சுசேனன் அவ்விடத்திற்கு ஓடி வந்தார்.லட்சுமணன் உயிர் துறக்கவில்லை மயக்கத்தில் உள்ளான் என்று அறிவித்தார்.உடனே அனுமனை ஹிமாலய பர்வதம் சென்று அரிய மூலிகைகளை கொண்டு வரச்செய்தார்.அனுமனும் பறந்து சென்று மூலிகைகளை கொண்டுவர லட்சுமணன் பழைய நிலையை அடைந்தார்.ராமனும் மகிழ்ந்தார்.

ராவணன் அழகியஉயர்ந்த ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு அரிய அஸ்திரங்களுடன் மிகுந்த ஆரவாரத்துடன் வந்தான்.ராமன் தரையில் நின்று போர் செய்ய வேண்டியிருந்தது.

தேவர்களுக்கு அரசனான இந்திரன் தெய்வீக வல்லமை வாய்ந்த ஆயுதங்களோடு அமைந்த ரதத்தை மதலி என்ற சாரதியோடு அனுப்பிவைத்தார்.அந்த ரதம் ராமனுக்கு எதிரே கீழே இறங்கி வந்தது.

இதற்கு இடையில் அகஸ்திய முனிவர்’ஆதித்ய ஹிருதயம்’ என்ற மந்திரத்தை ராமனுக்கு உபதேசித்தார்..அவரிடம் இருந்த அரிய சூஷ்திரங்களை அவனிடம் ஒப்படைத்து அதனை பயன்படுத்தும் முறைகளையும் கூறினார்.

ராம,ராவண யுத்தம் பயங்கரமாக இருந்த்து.அஸ்திர,சாஸ்திரங்கள் யாவும் பயன்படுத்தபட்டன.ராவணனுடைய ஆயுதங்கள் அனைத்தையும் தாக்கினார்.இறுதியில் ராவணனின் தலையை கொல்ல தீர்மானித்தார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...