Thursday 5 January 2023

34. மயில் ராவணன்




யுத்தத்தில் தன் போர் வீரர்களை இழ்ந்து கொண்டிருந்த ராவணனுக்கு,ராமனால் தானும் கொல்லப்படுவோமோ என்ற பயம் வந்தது.எனவே அவன் பாதாள  உலக அரசனான மயில்ராவணனை வரவழைத்தான்.பிரம்மனைக்குறித்து தவம் இருந்து அரிய வரங்களைப் பெற்றவன் மயில்ராவணன்.மாயா ஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

தன்னை வணங்கிய  மயில்ராவணனிடம் தன்  நிலைமையை எடுத்துக்கூறி,ராம லட்சுமணரை அழிக்குமாறு உத்திரவிட்டான்ராவணன் கட்டளையை சிரமேற்கொண்ட மயில்ராவணன்,ராம.லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் சொல்லி புறப்பட்டான்.

இதை விபீஷணனின் ஒற்றர்கள் அறிந்து சுக்ரீவனிடம் சொல்லி..ராம லட்சுமணரை பாதுகாக்கும்படி கூறினார்.அனுமன் ராமலட்சுமணர்களைபர்ணசாலையின் உள்ளே அமர்த்தி,தன் வாலினால்பர்ணசாலையின் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் காத்தான்.

விபீஷணனின் உருவமெடுத்து மயில்ராவணன் அனுமனிடம் வந்தான்.ராம லட்சுமணரை பார்த்து வருவதாக கூறி உள்ளே சென்றான்.தனது மாய சக்தியால் அவர்களை சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

‘மாருதி ஜாக்கிரதை’ மயில்ராவணன் என் உருவத்தில்கூட இங்கு வர முயற்ச்சிப்பான் என அனுமனை எச்சரித்துவிட்டு புறப்பட்டான் சுக்ரீவன்.பாதாளலோகம் வந்த மயில்ராவணன்,ராம லட்சுமணர்களை நிஜ உருவம் பெறச்செய்து அவர்களை சிறைவைத்தான்.

மயில்ராவணன் சென்றபிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார்.’இப்போதுதானே வந்துபோனீர்கள் என்று அவரிடம் அனுமன் கேட்க,வந்தது நான் இல்லை என்றார் விபீஷணன்.

அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க,அங்கே  ராம லட்சுமணர்கள் இல்லை.இது மயில்ராவணன் வேலை என்று உணர்ந்தார்.

அவரிடம் மயில்ராவணன் இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹிராவணன் பற்றியும் கூறினார்.

விபீஷ்ணன் அனுமனிடம் ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும்,அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் கூறினார்.

அதன்படி பாதாளஉலகம் சென்ற ஆஞ்சனேயர் அங்கிருந்து காளி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டார்.

No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...